Friday, March 19, 2010

சில நேரத்தில் அம்மா

சில நேரத்தில் அம்மா
இரா. அரிகரசுதன்

“விளங்குறதுக்கு உள்ளவன்னா
பெறந்த அண்ணைக்கே செத்திருந்திருப்பியே”

என் இயலாமைகளை
வெட்டித் தள்ளுவதற்காய்
கத்தியுடன் திரிந்து கொண்டிருக்கும் நீ

என் தளிர்களில்
கருவண்டு புகுந்துள்ளது
என்றும்

என் கனிகள்
உருப்படாதவைகள் என்றும்

என்வேர்
உழுத்துவிடும் என்றும்

கூறிக்கொண்டே

என் உயிர்க்காலைப்
பிடித்து நறுக்கென்று அறுத்து வீசிய
உன் அன்பில்

என்ன செய்வது

நான் இன்னும்
உயிரோடுதான் இருக்கிறேன்

-----
19.03.2010

No comments: