Thursday, June 9, 2011

ஒழுகும் நதி

புயல் காற்று இழுத்துச்செல்லும்
ஒற்றைப் படகு
தலை சுற்றித் திரியும்
அந்தத் திசையில்

கிளை பரப்பி வளர்ந்திருக்கும்
ஒரு கொடுங்கத்தி மரமென
சரிந்துக் கிடக்கின்ற நீ

உறைந்த நினைவுகளுக்குள் 
ஒழுகும் நதியாய்
நீந்திக் கொண்டிருக்கிறாய்!

 -------இரா. அரிகரசுதன், 09 .06 .2011

No comments: