Tuesday, June 21, 2011

நினைவோடை

தளை நார் கொண்டு 
தென்னை மரத்தில் கட்டிப் 
போடப்பட்டிருந்த அந்த 
குட்டியானை என் முகத்தை  
தொட்ட வேளையில்
தும்பிக்கையிலிருந்து
வழிந்த எச்சிலின் மணம்
காலையில் முத்தம் கொடுத்து 
வந்த பச்சக் குழந்தையின் 
உடல் மணத்த தாய்ப்பாலாய்
உயிர் சிலிர்க்க கண் பணித்த
திரையில் நகர்ந்துகொண்டிருந்தது
அம்மாவைப் பற்றிய ஞெகிழ்வு 
--- இரா. அரிகரசுதன், 21.06.2011

No comments: