Saturday, November 19, 2011

வழியனுப்ப வந்தாள் யாழினி

எங்க போறீங்க மாமா?
வேலைக்கு.
எதுக்கு?
விளக்கிக் கொண்டிருந்தேன்.

எங்கபோறீங்க மாமா?
வேலைக்கு.
எதுக்கு?

அங்கபாரு குருவி சத்தம் கேட்குதா?
அண்ணாந்து பார்த்தாள்
இலைகளால் வசியம் செய்யும்
நிமிர்ந்த அரச மரம்

ஐ... மாமா... குருவிச்சத்தம்!
அது கிளிக்க சத்தம்.
கிளி எப்படி சத்தம்போடும்?
கீ..கீ..ண்ணு சத்தம்போடும்.
கிளி எப்படி சத்தம் போடும்?

கிளி இருக்குல்லா... கிளி இருக்குல்லா....
அதுஉ கீ.. கீ...ண்ணு சத்தம்போடும்.
எப்படி சத்தம்போடும் சொல்லு..
கீ... கீ...ண்ணு சத்தம்போடும
சத்தமா சொல்லு பாப்போம்.
கீ... கீ....

கிளியின் சிரிப்பில் பேருந்துகள் அசைந்தன
அவள் சத்தத்தை அவளே நம்பாமல்
கட்டிப்பிடித்துக் கொண்டாள்
உயிர்கூட்டுக்குள் ஈரத்தென்றல்

பயணிகளின் பார்வையில்
நானும் யாழினியும்
யாழினியின் அப்பாவும்

முகங்களில் குதிக்கும் முயல்குட்டியின் வசியத்தில்
மயங்கின சில பேருந்துகள்.

மாமாவுக்கு டாட்டா சொல்லு!
டாட்டா....!     
டாட்டா.....!

அப்பா, மாமா எங்க போறாங்க...?

................ இரா. அரிகரசுதன், 20.11.2011,1.00 am

No comments: