Tuesday, November 13, 2012

தீபாவளி கவிதைகள் 2- தீபாவளி பலகாரங்கள் ருசிப்பதில்லை

தீபாவளி பலகாரங்கள் ருசிப்பதில்லை

மதுநனைந்த புத்தாடைகளுடன்
ஒரு இளைய கூட்டம்
வெடித்துக் கொண்டிருந்தது

அவர்களையேப் பார்த்தப்படி
குந்தியிருந்த அசோகன்
ஒரு தேநீர்குடிக்கலாம்
வாவென்றான் என்னை

சூரிய ஒளி நுழைந்து
கிடந்த குடிசையினுள்
நானும் நுழைந்தேன்

வெளிக்காவல்
போலிருக்கிறது என்றேன்

பட்டாசுப் பொறியில்
குடிசை எரிந்தால்
பயந்து கிடக்கிறேன்
என்றான்


செய்திருந்த சுழியமும்
தேநீரும் வந்தது

குடிசைவீடுகளில்
பலகாரங்கள் ருசிப்பதில்லை
தீபாவளிக்கு
................................. இரா. அரிகரசுதன், 13.11.2012, 11.50 pm

No comments: