
பொட்டித் தெறிக்கும்
தனிமையின் சூட்டில்
கால் ஒடிந்து கிடக்கிறது
ஒருபறவை சிறகோடு
நினைவுகளின்
கலங்கியத் தேக்கத்தில்
வறண்டு கிடக்கும்
நாக்கை நனைத்துக் கொண்டு
பெருமூச்சு விடுகையில்
இதயத்தின் மெல்லிய
நரம்புகள் அறுந்து
தெறிக்கின்றன
விரல் நுனியில்
கனன்று கிடக்கும்
கவிதையின் சூடு
எடுத்துவரும்
அணையா நெருப்புக் கங்கின்
சூட்டில்
உருகி இணைகின்றன
நரம்புகள்..
இலக்கு தகர்க்கும்
அம்பு இயக்கி
வில்லின் நாதம்
அதிர்ந்து எழுகிறது..
எழுகவே....!
......
மே,2008
No comments:
Post a Comment