Friday, July 29, 2011

கதையின் நதி ஓடத்தை அடித்து சென்றது

ஆழ்பசை
நிறம் பரப்பி நின்றிருந்த
வாதுமை மரத்தினடியில்
மொழுக்கு கல்லில்
அவனின் காதல் பற்றிய
வெப்பம் திமிறிய கதைகளை
எட்டு கால் பாய்ச்சலில்
சொல்லிக் கொண்டிருந்தான்

கதையிலிருந்து எழுந்து வந்த நதி
இழுத்து சென்ற ஓடத்தில்
கையசைத்திருந்தவளின் பிம்பம்
ஆடிக்கொண்டிருந்தது
நிலவு வெறித்துக்கொண்டிருந்தது 
இரா. அரிகரசுதன், 27.07.2011

No comments: