Friday, September 2, 2011

சாட்சி சொல்லிகளின் காலம்

மணித்துளிகளின்
சங்கிலி வட்டத்தில்
எல்லாப் புள்ளிகளும்
வெளிச்சத்தில் தொங்க வேண்டுமாம்

மின்சாரத் தேவையின் தீர்வுப்புள்ளியை
வன்புணர்ந்து
கோடுபோடுகிறது
அணுசக்தி

நிலம் நீர் காற்று உயிர் என
எல்லாமும் எரிந்து
எழும்பும் புகைமண்டி
நாறும்போது

கிழிந்து தொங்கும் வெளிச்சம்
பற்றிய உண்மையை
யார் சாட்சி சொல்வது?
---
இரா. அரிகரசுதன்

No comments: